பிறை தேட வேண்டிய நாளான 28.05.2025 புதன் கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில் பரவலாக பல பகுதிகளில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின்
அடிப்படையில் 28.05.2025 புதன்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் வரும் 06.06.2025 வெள்ளிக்கிழமை அரஃபா நோன்பு என்பதையும் 07.06.2025 சனிக்கிழமை ஹஜ் பெருநாள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்