மாவட்ட செயற்குழு – திருவள்ளூர் கிழக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் செயற்குழு மாவட்ட தலைவர் சகோ. மாலிக் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
துவக்க உரையாக மாவட்ட துணைச்செயலாளர் சகோ. சையது அவர்கள் நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அடுத்ததாக மக்தப் மதரஸா தகவல்களை மாவட்ட துணைச் செயலாளர் சகோ. அன்வர் பாஷா அவர்கள் வழங்கினார்கள்.
அடுத்ததாக பொருளாதார தகவல்களை மாவட்ட பொருளாளர் சகோ.ஷரீஃப் அவர்கள் வழங்கினார்கள்.
அடுத்ததாக நிர்வாகம் மற்றும் அணி தகவல்களை மாவட்டச்செயலாளர் சகோ.அஸாருதீன் அவர்கள் வழங்கினார்கள்.
அடுத்ததாக குர்பானி மற்றும் ஆம்புலன்ஸ் தகவல்களை மாவட்ட தலைவர் சகோ. மாலிக் பாஷா அவர்கள் வழங்கினார்கள்.
அடுத்ததாக நிர்வாகம் மற்றும் ஊடகம் ஐ.டி.விங் தகவல்களை மாவட்டத் துணைத் தலைவர் சகோ.நிஜாமுதீன் அவர்கள் வழங்கினார்கள்.
அடுத்ததாக மாநில பொதுச்செயலாளர் சகோ. முஜிபுர்ரஹ்மான் அவர்கள்
இமாமைப் பின்பற்றுவோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
மாநில செயலாளர் சகோ. ஃபெரோஸ் கான் அவர்கள் அழகிய முன் மாதிரி இப்ராஹீம் (அலை) என்ற தலைப்பில் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்கி வழிகாட்டுதலை வழங்கினார்கள்.
இறுதியாக மாவட்ட பொருளாளர் சகோ. ஷஃரிப் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here