கத்தாரில் சிக்கியுள்ள காதர் மைதீன் குறித்த அறிவிப்பு

காதர் மைதீன் என்பவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திற்கு கோரிக்கை வைப்பது போல ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் அவர் வெளிநாட்டில் இருந்து மீட்டு கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு முன்பே அவருடைய குடும்பத்தார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை அனுகி கோரிக்கை வைத்திருந்தனர்.

இராமநாதபுரம் பனைக்குளம் பகுதியை சார்ந்த காதர் மைதீன். இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கல்கத்தா ஏஜெண்ட் மூலம் 25.07.2021 அன்று கத்தார் சென்றுள்ளார்.

அவர் கத்தாரில் இருக்கிறார் என்ற அடிப்படையில் கத்தார் மண்டல நிர்வாகிகள் மூலம் அவரை மீட்க முயற்சி செய்து வருகிறோம்.

கத்தாரில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு துறைகளை இது குறித்து அனுகும் பணிகள் நடந்து வரும் சூழ்நிலையில் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. கத்தார் மற்றும் சவூதி நாட்டு எல்லையில் அவர் இருக்கிறார்.

சவூதி ஜித்தாஹ் மண்டல நிர்வாகிகள் மூலமாகவும் அனுக சொல்லி உள்ளோம்.

இலகுவாக அவரை அனுக முடியாத இடத்தில் இருந்தாலும், அதற்கான முயற்சிகளை நம்முடைய நிர்வாகிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மேலும் நம் நாட்டில் இருந்தும் அரசு துறைகள் மூலமாக அனுக இதற்கான வழிகாட்டுதல்களை குடும்பத்தாருக்கு கொடுத்து அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறோம்.

அவர் விரைவில் ஊர் திரும்ப தேவையான முயற்சிகளை செய்து வருகிறோம். விரைவில் அவர் ஊர் திரும்ப இறைவன் உதவி புரிய பிரார்த்தனை செய்யவும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநில தலைமையகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here