ஃபாசிச பாஜக ஆட்சியாளர்களுக்கு எதிராக குனூத் நாஸிலா ஓதுவோம்

நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இழிவாகப் பேசிய நுபுர் சர்மா, மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் தரக்குறைவான விமர்சனத்தை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

ஜனநாயக ரீதியில் நடைபெற்ற போராட்டத்தில் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கி அப்பாவி முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியும், போராட்டம் நடத்தியவர்களின் வீடுகளை அநியாயமாக புல்டோசரை வைத்து இடித்தும் பாசிச பாஜக ஆட்சியாளர்கள் அநியாயம் செய்து வருகின்றனர்.

முஸ்லிம்களின் சொத்துக்களையும், வணிக நிறுவனங்களையம் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்து அவர்கள் அநியாயமான தாக்குதல்களை பாசிச பாஜக வின் காவல்துறை செய்து வருகிறது. வட மாநிலங்களில் பாசிச ஆட்சியாளர்களால் முஸ்லிம்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல் சொல்லொணாத் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாசிச பாஜக ஆட்சியாளர்கள் ஆளும் பல மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் மற்றும் மாணவிகள் முக்காடு அணிவதற்கும் சட்டத்திற்கு புறம்பாக மறைமுகமான தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். கர்நாடகா போன்ற மாநிலங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக் கணக்கான மாணவிகள் தமது கல்வியை இழந்துள்ளனர்.

ஏராளமான இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களை அபகரித்து இடிப்பதற்கான சதிச் செயல்களும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரங்கேறி வருகிறது. இவற்றை சமூக ஊடகங்களும், பல செய்தி நிறுவனங்களும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளனர்.

நபியை இழிவுபடுத்தியதைக் கண்டித்து போராடிய எனது மகனை அநியாயமாகக் கொன்றுவிட்டார்களே என ஒரு தாய் கதறும் காட்சிகளால் நமது கண்களும் குளமாகின்றன.

இவைகளை கண்டிக்கும் விதமாக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கிறோம். இது போன்ற அக்கிரமங்கள் அரங்கேறும் நேரத்தில் அல்லாஹ்விடம் முறையிடவும் அல்லாஹ்வின் தூதர் வழிகாட்டியுள்ளார்கள்.

இது போன்று அநியாயமான முறையில் மக்கள் கொல்லப்படும் போதும், பாதிப்பிற்குள்ளாகும் போதும் அம்மக்களுக்கு ஆதரவாகவும், அக்கிரமக்காரர்களுக்கு எதிராகவும் ஐவேளை தொழுகைகளில் குனூத் நாஸிலா எனும் பிரார்த்தனையை செய்வதற்கு நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

ஆகவே ஜனநாயக ரீதியில் போராடுவோரை வன்முறையாளர்களாகச் சித்தரித்து அப்பாவி முஸ்லிம்களை ஈவு இறக்கமின்றி கொன்று குவிக்கும், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுக்கும் உ.பி முதல்வர் அக்கிரமக்கார யோகி ஆதித்யநாத்துக்கும். அவரது பரிவாரங்களுக்கும் எதிராக அல்லாஹ்வின் சாபத்தை வேண்டி குனூத் நாஸிலா ஓதும் படியும், பாதிக்கப்பட்ட மக்களின் மன அமைதிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.

“கடமையான ஐவேளை தொழுகைகளிலும். அல்லது ஒரு சில கடமையான தொழுகைகளிலும் ஓதிக்கொள்ளலாம்”

குனூத் நாஸிலாவின் சட்டங்கள்.

🎤 ஐவேளே தொழுகையில்
🎤 கடைசி ரக்அத்தில்
🎤 ருகூவுக்கு பின்பு
🎤 இமாம் சப்தமாக
🎤 பின்பற்றி தொழுவோர் சப்தமில்லாமல்
🎤 ஆமின் இல்லாமல்
🎤 தாய் மொழியிலும் குனுத் ஓத வேண்டும்.

குனூத் நாஸிலா பற்றிய சட்டங்கள் பற்றி மேலும் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://onlinetntj.com/articles/kunuth-naasilah

இப்படிக்கு,
ஆர்.அப்துல்கரீம்,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here