வடசென்னை மாவட்ட செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

டசென்னை மாவட்ட செயற்குழு 02/06/24 அன்று காலை 07.30 மணியளவில் துறைமுகம் கிளை மர்கஸ்ஸில் மாவட்ட தலைவர் காஜா மொய்தீன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
ஆரம்பமாக மாவட்ட துணை செயலாளர் சகோதர் ஜலாலுதீன் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.
அடுத்து மாவட்ட துணை செயலாளர் சகோதரர் ஜாவித் அஷ்ரப் அவர்கள் ” IT WING” அவசியத்தை பற்றி விளக்கம் அளித்தார்.
அடுத்து மாவட்ட மாணவரணி செயலாளர் சகோதரர் சாதிக் அவர்கள் “கிளை செயல்பாடுகள்” சம்பந்தமாகவும்,
மாவட்ட மருத்துவரணி செயலாளர் சித்திக் அவர்கள் “இரத்ததானம் முகாம் & அவசர இரத்ததானம் “அவசியம் சம்பந்தமாக விளக்கம் அளித்தார்கள்.
மாவட்ட பொருளாளர் சகோதரர் முஸ்தாக் அவர்கள் ” பொருளாதாரம் ” சம்பந்தமாக பேசினார்கள்.
அடுத்து கூட்டு குர்பானி செயல் திட்டங்கள் சம்பந்தமாக மாவட்ட செயலாளர் சகோதரர் M. அன்சாரி அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.
அடுத்ததாக மாநில பொருளாளர் சகோதரர் காஞ்சி இப்ராஹீம் அவர்கள் ” அழகிய முன் மாதிரி இப்ராஹீம் (அலை)” 10 மாத தொடர் பிரச்சாரத்தின் செயல் திட்டத்தை கிளை நிர்வாகிகளுக்கு எவ்வாறு செயல்படுத்துவது என்பது சம்பந்தமாக விளக்கம் அளித்தார்.
இறுதியாக மாவட்ட துணை தலைவர் சித்திக் அவர்களின் நிகழ்ச்சி நன்றியுரை & துஆவுடன் இனிதே மாவட்ட செயற்குழு நிறைவு பெற்றது.
இதில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை அணிச்செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here