பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் – சோழபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,சோழபுரம் கிளை சார்பாக இயங்கி வரும் உம்மு ஸலமா பெண்கள் இஸ்லாமிய கல்வியகதின் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டிற்கான பட்டமளிப்பு நிகழ்ச்சி 09-06-24 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு சோழபுரம் கீழ வீதியில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சகோ. H. ஜாஃபர் அலி அவர்களின் தலைமையில்,மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் TNTJ மாநில துணை தலைவர் மற்றும் உம்மு ஸலமா கல்வியகதின் முதல்வர் K. தாவூத் கைஸர் MISC அவர்கள்
உம்மு ஸலமா பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின் செயல்பாடுகள்!
என்ற தலைப்பிலும்…
TNTJ மாநில செயலாளர் சகோதரர்
A. சபீர் அலி MISC அவர்கள்..
தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
TNTJ தணிக்கை குழு தலைவர் சகோதரர்
M.S சுலைமான் ஃபிர்தவ்ஸி அவர்கள்..
கற்றோரின் கடமையும்! பெற்றோரின் கடமையும்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
இதில் 600 கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
அதை தொடர்ந்து 2&3ஆம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி ஆரம்பம் ஆகி43 மாணவிகள் பட்டம் பெற்றனர்
அதன் அடுத்து…
உம்மு ஸலமா பெண்கள் இஸ்லாமிய கல்வியாகத்தின் பயின்று வரும் மாணவிகளின் பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தலைப்பு;வரதட்சணை திருமணங்களுக்கு பெரிதும் காரணம் மணமகன் வீட்டாரா? மணமகள் விட்டாரா?
இதில் தீர்மானம் கிளை செயலாளர் A.முகமது புரோஸ் அவர்கள் வாசிக்கப்பட்டதற்கு பின் இறுதியாக சோழபுரம் கிளை தலைவர் சகோ.A.ஹஜ் முஹம்மது அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here