தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் (ஹிஜ்ரி 1443) மற்றும் ஹஜ்பெருநாள் பற்றிய அறிவிப்பு.

பிறைதேட வேண்டிய நாளான இன்று 30.06.2022 வியாழக்கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்

(30.06.2022) வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும்

வரும் 09.07.2022 சனிக்கிழமை அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்பதையும்

10.07.2022 ஞாயிற்றுக்கிழமை ஹஜ்பெருநாள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.